பாளை. பேருந்து நிலைய வியாபாரிகள் - 2-வது நாளாக மழையில் குடும்பத்தினருடன் போராட்டம் :

By செய்திப்பிரிவு

பாளையங்கோட்டை பேருந்து நிலைய வியாபாரிகள் கொட்டும் மழையில் 2-வது நாளாக குடும்பத்தினருடன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

`பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் ஏற்கெனவே கடை நடத்தியவர்களுக்கு மீண்டும் அங்கு கடைகளை ஒதுக்கித்தர வேண்டும். புதிய வணிக வளாகத்தில் கட்டப்படும் கடைகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும். டெபாசிட் தொகையை குறைக்க வேண்டும்' என வலியுறுத்தி, பாளையங்கோட்டை பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத்தினர் தங்கள் குடும்பத்தினருடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்றுமுன்தினம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை மனுவை ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் அளித்திருந்தனர். இந்நிலையில் நேற்று 2-வது நாளாக கொட்டும் மழையில் குடைகளை பிடித்துக்கொண்டு வியாபாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் ஆட்சியர் அலுவலக பிரதான வாயில்முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE