விபத்தில் பெயிண்டர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டம் காட்பாடி செங்குட்டை பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் குமரன்(35) பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.

இவர், தனது குடும்பத்தாருடன் வள்ளலார் பகுதி 4-ல் வசித்து வந்தார். இந்நிலையில், வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனது வீட்டுக்கு குமரன் இரு சக்கர வாகனத்தில் நேற்று பிற்பகல் சென்றுக் கொண்டிருந்தார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சத்துவாச்சாரி மேம்பாலம் வழியாக சென்றபோது பின்னால் வந்த கார் அவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட குமரன், மேம்பாலத்தில் இருந்து கீழே சர்வீஸ் சாலையில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த தகவலறிந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குமரனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த குமரனின் மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்