கோவையில் 10-ம் தேதி : வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம் :

By செய்திப்பிரிவு

கோவை: மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் ‘நிதி ஆஃப்கே நிகட்’ என்ற பெயரில் அக்டோபர் மாத குறைதீர்கூட்டம் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் தலைமையில் வரும் 10-ம் தேதி நடைபெறும். சந்தாதாரர்களுக்கு காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரையும், தொழிலதிபர்களுக்கு பகல் 12 மணி முதல் 1 மணி வரையும், ஓய்வூதியதாரர்களுக்கு பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரையும் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தங்களது குறைகளை தங்கள் பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி எண், யுஏஎன் எண், ஓய்வூதிய நியமன ஆணை எண், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி (கட்டாயம் அளிக்க வேண்டும்) ஆகிய விவரங்களை வருங்கால வைப்புநிதி அலுவலகத்தின் pghs.rocbe@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு முன்கூட்டியே அனுப்ப வேண்டும்.

இவ்வாறு மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்