தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரயில்களில் பயணிக்க மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், உயிர்காக்கும் சிகிச்சை மேற்கொள்வோர், போர் மற்றும் தீவிரவாத எதிர்ப்பில் உயிரிழந்த ராணுவ, காவல் துறையினரின் மனைவிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 53 பிரிவினருக்கான பயண சலுகை வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு ரயில் பயணச் சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது கரோனா நோய் பரவல் பெருமளவு குறைந்திருப்பதால் சிறப்புரயில்களை ரத்து செய்து, வழக்கமான ரயில்களை இயக்க வேண்டும். ஏற்கெனவே வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் உடனடியாக மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago