பாளையங்கோட்டையிலுள்ள மாநில தமிழ்ச் சங்கத்தில் உலக திருக்குறள் தகவல் மையத்தின் சார்பில் திருக்குறள் தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. மாவட்ட தலைவர் வை. ராமசாமி தலைமை வகித்தார். பேராசிரியர் பா. வளன்அரசு முன்னிலை வகித்தார். தி. முகுந் தன் வரவேற்றார். பழிகாணேன் கண்ட இடத்து என்ற தலைப்பில் கி. பிரபா உரையாற்றினார்.