தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் ஆர்ப்பாட்டம் :

திரிபுராவில் முஸ்லிம்கள் மீதும், அவர்களுக்கு சொந்தமான பள்ளிவாசல்கள், வீடுகள், கடை கள் மீதும் தாக்குதல் நடத்து வதைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியிலுள்ள காந்தி சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு அமைப் பின் மாவட்டத் தலைவர் அப்துல் நாசர் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் தாவுத் கைசர் கண்டன உரையாற்றினார். இதில், மாவட்டச் செயலாளர் பைசல் நிசார், மாவட்டப் பொருளாளர் சாகுல் ஹமீத், மாவட்ட துணைத் தலைவர் ஜாஹீர் உசேன், மாவட்ட துணைச் செயலாளர்கள் அஸ்ரப் அலி, அப்துல்லாஹ் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE