கோவையில் 13 வட்டாட்சியர்கள் : பணியிட மாற்றம்: ஆட்சியர் உத்தரவு :

கோவை: கோவையில் 13 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: மதுக்கரை வட்டாட்சியர் ஏ.நாகராஜன், கோவை விமான நிலைய ஓடுதள விரிவாக்க தனி வட்டாட்சியராகவும் (நில எடுப்பு), அந்தப் பணியில் இருந்த ஏ.இசட்.பர்சானா, மதுக்கரை வட்டாட்சியராகவும் நியமிக்கப்படுகின்றனர். கோவை தெற்கு வட்டாட்சியர் எஸ்.புனிதவதி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தனி வட்டாட்சியராகவும் (நில எடுப்பு), அந்தப் பணியில் இருந்த எஸ்.சரண்யா, கோவை தெற்கு வட்டாட்சியராகவும் நியமிக்கப்படுகின்றனர். அன்னூர் வட்டாட்சியர் எஸ்.ரத்தினம், ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியராகவும் (நில எடுப்பு), அந்தப்பணியில் இருந்த ஏ.வி.சிவக்குமார் அன்னூர் வட்டாட்சியராகவும் நியமிக்கப்படுகின்றனர்.

மேட்டுப்பாளையம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் வி.தங்கராஜ், மேட்டுப்பாளையம் நகர நிலவரி திட்ட தனி வட்டாட்சியராகவும், அந்தப்பணியில் இருந்த எஸ்.சிவக்குமார், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வரவேற்பு அலுவலராகவும் நியமிக்கப்படுகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வரவேற்பு அலுவலர் எஸ்.சதீஷ், கோவை தெற்கு சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராக நியமிக்கப்படுகிறார். ஆனைமலை சமுக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் என்.பானுமதி ஆனைமலை வட்டாட்சியராகவும், அந்தப் பணியில் இருந்த என்.விஜயகுமார், பொள்ளாச்சி கோட்ட கலால் அலுவலராகவும் நியமிக்கப்படுகின்றனர். பொள்ளாச்சி கோட்ட கலால் அலுவலர் பி.வெங்கடாசலம், பொள்ளாச்சி சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும், அந்தப்பணியில் இருந்த ஜி.தணிகைவேல், ஆனைமலை சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும் நியமிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்