குட்டையில் கார் கவிழ்ந்து விபத்து பெங்களூருவைச் சேர்ந்த 5 பேர் காயம் :

நாமக்கல்: குமாரபாளையம் அருகே கார் குட்டையில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு தனியார் நிறுவன ஊழியர்கள் அபேட் (22), ஜார்ஜ் (24), பிரியா (21), மனாக் (23) மற்றும் அனுவிந்த் (22). இவர்கள் 5 பேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக காரில் புறப்பட்டனர். ஜார்ஜ் காரை ஓட்டி வந்தார். குமாரபாளையம் வட்டமலை தட்டான்குட்டை பிரிவு அருகே கார் வந்தபோது ஜார்ஜ் அணிந்திருந்த கண் கண்ணாடி தவறி கீழே விழுந்துள்ளது.

இதனால் ஜார்ஜ் தடுமாறியதால் சாலையின் நடுவே இருந்த தடுப்பு மீது கார் மோதியது. அப்போது தூக்கி வீசப்பட்ட கார் அருகே சர்வீஸ் சாலையை கடந்து விவசாய நிலத்தில் தேங்கியுள்ள மழை நீர் குட்டையில் கவிழ்ந்தது.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த மீட்டனர். விபத்தில் 5 பேரும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இது தொடர்பாக குமாரபாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்