திமுக வட்டச் செயலாளருக்கு கத்திக் குத்து :

திருச்சி: திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். திமுகவின் 4-வது வட்டச் செயலாளரான இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் குத்தி, தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த கண்ணனை குடும்பத்தினர் மீட்டு, புத்தூரிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கண்ணனைத் தாக்கியவர்கள் குறித்து ரங்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்தபடி கண்ணன் ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ குறித்தும் ரங்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்