விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு :

ஆற்காடு: ஆற்காடு அருகே விபத்தில் சிக்கிய கூலித்தொழிலாளி உயிரிழந்தார். அவருடன் வந்த நண்பர் படுகாயமடைந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த காவனூர் அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஏழுமலை(30). இவர், தனது நண்பரான விஜி என்பவருடன் நேற்று முன்தினம் மாலை காவனூரில் இருந்து திமிரிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார். வாகனத்தை ஏழுமலை ஓட்டிச்சென்றார். காவனூர் அருகே சென்றபோது அதிவேகமாக சென்றதில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். ஏழுமலை பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த திமிரி காவல் துறையினர் விரைந்து சென்று காயமடைந்த விஜியை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு, ஏழுமலை உடலை கைப்பற்றிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்