சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு :

வேலூர்: பள்ளிகொண்டா அருகே அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி சதாசிவம்(55). இவருக்கு சொந்த மான விவசாய நிலம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளது. இந்நிலையில், நேற்று காலை விவசாய நிலத்துக்கு சென்ற சதாசிவம் அங்கிருந்து வீடு திரும்பினார். வெட்டுவானம் அருகே தேசிய நெடுஞ்சாலையை அவர் கடக்க முயன்றார். அப்போது, ஓசூரில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற அரசுப் பேருந்து அவர் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட சதாசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பள்ளிகொண்டா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்