பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் :

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கோவை மத்திய மண்டலக் குழுவின் சார்பில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே நேற்று நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.தேவராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து அலங்கரிக்கப் பட்டு இருந்தது. அதை சுற்றிலும் பெண்கள் அமர்ந்து அழுதபடி இருந்தனர்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். என வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

மண்டல கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE