முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு - பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்தார் :

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 59-வது குருபூஜையை முன்னிட்டு, தேனிமாவட்டம், பெரியகுளத்தில் அவரது சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்தார்.

பெரியகுளம் தென்கரையில் உள்ள தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்தார். பின்னர், தேவரின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவினார்.

அதிமுக மாவட்டச் செயலாளர் சையதுகான், ஆவின் தலைவர் ஓ.ராஜா, முன்னாள் எம்பி பார்த்திபன், பெரியகுளம் நகர் செயலாளர் ராதா, ஒன்றியச் செயலாளர் செல்லமுத்து, இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் நாராயணன், நிர்வாகிகள் தேனி முருகேசன், ராஜவேலு, முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்