தேவர் நினைவிடத்தில் பொதுமக்கள் மரியாதை :

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் சமுதாய தலைவர்கள், ஏராளமான பொதுமக்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பசும்பொன்னில் முத்துராம லிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குரு பூஜை விழா நேற்று நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சி எம்எல் ஏக்கள் கரு.மாணிக்கம், எஸ். மாங் குடி, எஸ்.டி.திருநாவுக்கரசர், முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டியன், மாவட்ட தலை வர்கள் செல்லத்துரை அப்துல்லா (ராமநாதபுரம்), சத்தியமூர்த்தி (சிவகங்கை), கார்த்திகேயன் (மதுரை) உள்ளிட்டோர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத் தினர்.

பாஜக ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முரளிதரன் உள்ளிட்ட கட்சியினர் மரியாதை செலுத்தினர். அமமுக ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் எம்.முருகன், தேமுதிக ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா, நாம் தமிழர் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் காமராசு, மாவட்ட தலைவர் இசையரசன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

இதேபோல் பல்வேறு சமுதா யத் தலைவர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மரியாதை செலுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE