சேலம் மாவட்ட கிராமங்களில் நாளை - பட்டா திருத்த சிறப்பு முகாம் :

விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண பட்டா திருத்த சிறப்பு முகாம் மாவட்டத்தின் குறிப்பிட்ட கிராமங்களில் நாளை (29-ம் தேதி) நடக்கவுள்ளது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும், விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கென துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்கள் தலைமையில் வாரம்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

முகாமில் பெறப்படும் சிறு கணினி திருத்தம் சார்ந்த மனுக்களுக்கு அன்றைய தினமே தீர்வு காணப்படும்.

இப்பணிகள் நாளை (29-ம் தேதி) தொடங்கி 2022-ம் ஆண்டு பொங்கல் திருநாளுக்குள் முடிக்கப்பட உள்ளன.

வட்டாரம் வாரியாக நாளை (29-ம் தேதி) முகாம் நடக்கவுள்ள கிராமங்கள் விவரம்:

சேலம்- எருமாபாளையம், சேலம் தெற்கு- நெய்காரப்பட்டி, உத்தமசோழபுரம், சேலம் மேற்கு- செட்டிசாவடி, வாழப்பாடி- சர்க்கார் வாழப்பாடி, அக்ரஹாரம் வாழப்பாடி, ஏற்காடு- ஏற்காடு டவுன், சங்ககிரி- கோனேரிப்பட்டி அக்ரஹாரம், கல்வடங்கம், எடப்பாடி- பக்கநாடு, மேட்டூர்- காவேரிபுரம், கருங்கல்லூர்- கருங்கல்லூர், ஓமலூர்- காமலாபுரம், காடையாம்பட்டி- காடையாம்பட்டி, ஆத்தூர்- அப்பமசமுத்திரம், கெங்கவல்லி- கடம்பூர், பெத்தநாயக்கன்பாளையம்- பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல்- கிழக்கு ராஜாபாளையம் ஆகிய இடங்களில் முகாம் நடக்கவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்