கரூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் சிஐடியு டாஸ்மாக் மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு 40 சதவீத போனஸ் வழங்க வேண்டும் எனக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.