ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது :

மேலப்பாளையம் ஞானியரப்பா தெருவில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ஒரு டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில், திருமலைக்கொழுந்துபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம், முத்துப்பாண்டி என்ற முருகன், கீழநத்தத்தைச் சேர்ந்த மாயாண்டி, மேலப்பாளையம் ஆமீம்புரத்தைச் சேர்ந்த முகம்மது நஷீர் ஆகியோர் ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. 4 பேரையும் போலீஸார் கைது செய்து, காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். திருநெல்வேலி குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீஸாரிடம் அரிசியை ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்