வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் உயிரிழப்பு :

தூத்துக்குடி மாவட்டடம், வல்லநாடு பகுதியைச் சேர்ந்தவர் நல்லமுத்து (45). இவர், சங்கரன்கோவிலில் உள்ள எலுமிச்சை ஆராய்ச்சி மையத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். நேற்று வேலைக்கு செல்வதற்காக திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கே.டி.சி. நகர் பகுதியில் கென்றபோது, அந்த வழியாக வந்த மினி பஸ் மோதியதில் பலத்த காயம் அடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே நல்லமுத்து உயிரிழந்தார்.

இதுகுறித்து திருநெல்வேலி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் (30). இவர், கேரளாவில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். ஆழ்வார்குறிச்சி ரயில் நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, குறுக்கே ஆட்டோ வந்ததால் நிலை தவறி கீழே விழுந்த ஜோசப் பலத்த காயம் அடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து அம்பாசமுத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஷேக் முகம்மது என்பவரது மகன் முகம்மது ஹமீம் ரஷித் (18). இவர் தனது உறவினர் ஹர்சித் (19) என்பவருடன் தென்காசிக்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

தென்காசி அருகே முத்துவிநாயகபுரம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி முகம்மது ஹமீம் ரஷித் உயிரிழந்தார். இதுகுறித்து குற்றாலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE