கூட்டுறவு வங்கி கிளையை அமைச்சர் திறந்து வைத்தார் :

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 35-வது புதிய கிளை தொடக்க விழா புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சியில் நேற்று நடைபெற்றது.

புதிய வங்கி கிளையை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். மேலும் அவர்,‘சிறு வணிக கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், மகளிர் சுய உதவிக் குழுக் கடன் மற்றும் பயிர் கடன் திட்டங்களின் கீழ் 353 பேருக்கு ரூ.2.03 கோடி மதிப்பில் கடனுதவியை வழங்கினார். பின்னர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் 28 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு பெறுவதற்கான ஆணையையும் வழங்கினார்.

இதில், ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் காமாட்சி, சட்டப்பேரவை உறுப்பினர்கள்கிரி, சரவணன், காஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி கோபால், துணைத் தலைவர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE