கோவையில் போலீஸ் போல நடித்து : வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது :

கோவை: கோவை மாச்சம்பாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ஆகாஷ்குமார்(21). தனியார் நிறுவன ஊழியர். இவர், நண்பருடன் கடந்த 21-ம் தேதி இரவு போடிபாளையம் பகுதிக்குச் சென்றார். அப்போது அங்கு காரில் வந்த 3 இளைஞர்கள், ‘நாங்கள் மதுக்கரை போலீஸார், சாதாரண உடையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளோம்’ எனக்கூறி ஆகாஷ்குமாரை மிரட்டியுள்ளனர். பின்னர், அவரது செல்போன் மற்றும் வாகனத்தின் ஆர்.சி.புக் ஆகியவற்றை அந்த இளைஞர்கள் பறித்துக்கொண்டு சென்றனர்.

இதுதொடர்பாக, மதுக்கரை காவல்நிலையத்தில் ஆகாஷ்குமார் விசாரித்துள்ளார். அப்போதுதான் அந்த இளைஞர்கள் மூவரும் போலீஸ் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் வழக்கு பதிந்து மாச்சே கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக்(32), காந்திநகரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன்(36), பள்ளபாளையத்தைச் சேர்ந்த சரவணக்குமார்(38) ஆகியோரை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்