நிலக்கரி குறித்து பேச அமைச்சருக்கு உரிமை இல்லை: அண்ணாமலை கருத்து :

கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் எங்கும் நிலக்கரி தட்டுப்பாடு வராது என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி உறுதி அளித்துள்ளார். நிலக்கரி குறித்து பேச, தமிழக மின்சாரத்துறை அமைச்சருக்கு எந்த உரிமையும் இல்லை. தமிழக மக்களுக்கு மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக மின்வாரியம் இல்லை. தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்யத்தான் அது இயங்கி வருகிறது. தமிழக மின்சாரத்துறை அமைச்சருக்கு கமிஷன் வருவதற்காக ஒரு நிறுவனம் இயங்குகிறது என்றால், அது தமிழக மின்வாரியம் தான். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்