ராஜபாளையம் அருகே பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அரசு பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
ராஜபாளையம் அருகே உள்ள முத்தாநதிப் பகுதியில் அரசு பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கான பாதையை தனி நபர் ஆக்கிரமிப் பதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் வெகுதூரம் சுற்றி பள்ளிக்குச் செல்கின்றனர். ஆக்கிரமிப்பை அகற்றுமாறு அப் பகுதி மக்கள் தொடர்ந்து வலி யுறுத்தினர்.
இந்நிலையில், ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் ராஜபாளையத்தில் இருந்து வடகரை செல்லும் அரசு பேருந்தை முத்தாநதி பகுதியில் நேற்று சிறை பிடித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் வருவாய்த் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒரு வாரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என உறுதி அளித்தனர். அதையடுத்து, அரசு பேருந்தை பொதுமக்கள் விடுவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago