ஈரோட்டில் 191 பயனாளிகளுக்கு ரூ.1.72 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி :

ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி தலைமை வகித்தார். எம்பிக்கள் கணேசமூர்த்தி, செல்வராஜ், எம்எல்ஏக்கள் திருமகன் ஈவெரா, ஏ.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதன்படி சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் அழகு சார்பில் கரோனா தொற்றால் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள் இருவருக்கு தலா ரூ.5 லட்சம், கரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த 39 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் என 191 பயனாளிகளுக்கு ரூ.1.72 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஈரோடு கோட்டாட்சியர் பிரேமலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்