வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் இளைஞர் கைது :

திருப்பூர் முத்தணம்பாளையம் ஐயப்பா நகரில் தனியார் நிறுவனத்தில் அபினேஷ் கவுடா (22) என்பவர் பணியாற்றி வந்தார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். இவருடன் அதே நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்தவர் அஜய் மண்டல் (28). இவரும், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 14-ம் தேதி அபினேஷ் கவுடா மற்றும் அஜய் மண்டல் ஆகியோர் நிறுவனத்தின் விடுதியில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக இருவருக்குள்ளும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் அஜய் மண்டல் ஓங்கி அறைந்ததில், அபினேஷ் கவுடா காதில் இருந்து ரத்தம் வழிந்தது. இதையடுத்து அபினேஷ் கவுடா கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் அடிதடி வழக்காக நல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து, அஜய் மண்டலை கைது செய்தனர். இந்நிலையில் சிகிச்சையில் இருந்த அபினேஷ் கவுடா நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து அடிதடி வழக்கை, கொலை வழக்காக மாற்றி நல்லூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE