அரசுப் பேருந்து மோதி இருவர் உயிரிழப்பு :

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே நடந்த சாலை விபத்தில் அரசுப் பேருந்து மோதி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னக்கருப்பன் (25). இவரது நண்பர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அச்சம்குளம்பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (30). இருவரும் பொள்ளாச்சி அடுத்த வடக்கிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள தனியார் பொக்லைன் நிறுவனத்தில் ஆபரேட்டர்களாக பணிபுரிந்து வந்தனர்.

இருவரும் பொள்ளாச்சியிலிருந்து ராமநாதபுரத்துக்கு நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர். சின்னக்கருப்பன் இருசக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார். பொள்ளாச்சி- உடுமலை நெடுஞ்சாலையில் கோலார்பட்டி அருகே சென்றபோது, பழநியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த அரசுப் பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சின்னக்கருப்பன், திருப்பதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக, கோமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்