கோவையில் அதிமுக பொன்விழா :

கோவை: கோவை மாவட்ட அதிமுக சார்பில் அக்கட்சியின் 50-வது ஆண்டு பொன்விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் தலைமையில், கட்சி அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் இருந்து மேள, தாளங்கள் முழங்க அதிமுகவினர் ஊர்வலமாக சென்று, அவிநாசி சாலையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். பின்னர் கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த தலைவர்களின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, கட்சிக் கொடியை ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினர்.

இந்த நிகழ்வில், சிங்காநல்லூர் எம்எல்ஏ கே.ஆர்.ஜெயராம் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல, மாவட்டத்தின் பல பகுதிகளில் எம்எல்ஏக்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் தலைமையில் பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்