சிறுத்தை தாக்கியதில் 7 ஆடுகள் உயிரிழப்பு கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல் :

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே சிறுத்தை தாக்கியதில் 7 ஆடுகள் உயிரிழந்தன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்குட்பட்ட பெரும்பள்ளம் அணை அருகே கெம்பநாயக்கன்பாளையம் உள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த ரங்கசாமி 20 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று ரங்கசாமியின் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறியதில் 7 ஆடுகள் உயிரிழந்தன. மூன்று ஆடுகள் பலத்த காயத்துடன் தப்பின.

இதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் வனச்சரகர் பெர்னாட், சத்தி பிரிவு வனவர் தீபக்குமார் மற்றும் வனப்பணியாளர்கள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் இருந்த கால்தடங்களை ஆய்வு செய்த வனத்துறையினர், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஆடுகளைக் கொன்றுள்ளதை உறுதிப்படுத்தினர்.

சிறுத்தை தாக்கி உயிரிழந்த ஆடுகளுக்கு வனத்துறையினர் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்