ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் தொடக்கம் :

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று தொடங்கியது. ஈரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்கிய கூட்டத்தில், மாநில செயலாளர் முத்தரசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

எம்பிக்கள் சுப்பராயன், செல்வராஜ், கட்சியின் மாநில நிர்வாகிகள் மகேந்திரன், வீரபாண்டியன், ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பழனிசாமி, சிவபுண்ணியம், ஆறுமுகம், குணசேகரன், ராமசாமி, பத்மாவதி, என்.நஞ்சப்பன், ஈரோடு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தேசிய மற்றும் மாநில அரசியல் நிலைமை குறித்தும், கட்சியின் அமைப்பு நிலை, மாநாடுகள் குறித்தும் நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இரண்டாவது நாளாக இன்றும் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறும் என்றும், கூட்ட முடிவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்