வங்கதேச ராணுவ வீரர்களுக்கு பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி வீரர்கள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், வங்கதேசத்தைச் சேர்ந்த வீரர்கள், சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்துக்கு கடந்த 10-ம் தேதி வருகை புரிந்தனர். மேஜர் சுத்தப்பா ஜமான் தலைமையில் வந்த இக்குழுவில் ஒரு பெண் பயிற்சி அதிகாரி உட்பட 3 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இரு நாட்டு ராணுவத்தின் வலிமையை அதிகரிப்பது மற்றும் சிறப்பான பயிற்சிகளை பரிமாறிக் கொள்வது ஆகியவை அவர்களின் வருகைக்கான முக்கிய நோக்கமாகும்.
அவர்களுக்கு ராணுவ பயிற்சிகள் வழங்கப்பட்டன. அப்போது பல்வேறு தொழில்நுட்பங்கள் கற்றுத்தரப்பட்டன. மேலும், இக்குழுவினர் சென்னையில் உள்ள முக்கிய கலாச்சார பகுதிகளைப் பார்வையிட்டனர். பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் இத்தகவலை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago