கீரப்பாளையத்தில் யூரியா தட்டுப்பாடு :

சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீரப்பாளையம் ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் தர்மதுரை தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கீரப்பாளையம் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலையை தொடக்கி அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும். யூரியா, டிஏபி தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேத்தியாத்தோப்பு தனியார் கடைகளில் வேறு பொருள் வாங்கினால் தான் யூரியா என்ற நிலை உள்ளது. மாவட்ட வேளாண் துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்