கடலூர் துறைமுகத்தில் : முகக்கவசம் அணியாமல் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள் :

புரட்டாசி மாதம் முடிந்ததையொட்டி கடலூர் துறைமுகத்தில் பொதுமக்கள் மீன் வாங்க குவிந் தனர்.

தமிழக அரசு கரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில் புரட்டாசி மாதத்தில் மீன் மற்றும் இறைச்சிக்கடைகளில் கூட்டம் குறைவாக இருந்தது.

நேற்று முன்தினம் (அக்.16) சனிக்கிழமையுடன் புரட்டாசி மாதம் முடிவடைந்ததால் நேற்று காலை முதல் கடலூர் துறைமுகம் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சென்றனர்.

இதில் சமூக இடைவெளி இல்லாமலும், முகக் கவசம் அணியாமல் மீன்களை வாங்கி சென்றனர். மேலும் இது போல இறைச்சிக் கடைகளுக்கு முன்பு பொதுமக்கள் திரண்டு வாங்கி சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்