ரூ.12 லட்சம் முறைகேடு நிதி நிறுவன ஊழியர் மீது வழக்கு :

மதுரை ஆரப்பாளையம் பகுதி யில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில் களப் பணி அலுவலராக ஞானஒளிவு புரத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் பணிபுரிந்தார். இவர் நிதி நிறு வனத்துக்குச் சேர வேண்டிய 12 லட்சத்து 789 ரூபாயை கடந்த ஓராண்டுக்கு முன் முறைகேடு செய்து அபகரித்தது ஆய்வில் தெரியவந்தது.

இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு மேலாளர் பாக்கியராஜன் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், விக்னேஷ்வரன் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்