2024-ல் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும் : தொல். திருமாவளவன் பேட்டி

2024-ம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்பி தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர் களிடம் நேற்று அவர் கூறியதாவது:

தமிழகத்தில் இயற்கை மருத்துவம் தொடர்பான கல்லூரிகள், மருத்துவமனைகள் அதிகரித்து வருகின்றன. மத்திய அரசு இயற்கை மருத்துவர்களுக் கான நல வாரியத்தை அமைக்க வேண்டும். மதுரையில் அமைய வுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இயற்கை மருத்துவம் சார்ந்த பிரிவையும் சேர்க்க வேண்டும்.

உள்ளாட்சித்தேர்தலில் திமுகவின் நான்கு மாத நல் லாட்சிக்கு மக்கள் நற்சான்று வழங்கி உள்ளனர்.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் போராட்டத்தில் ஈடு பட்டுவரும் தொகுப்பூதியப் பணியாளர்களின் ஊதிய உயர்வு குறித்து முதல்வரைச் சந்தித்துப் பேசியுள்ளேன்.

சசிகலாவின் அரசியல் வருகை என்பது அவரது தனிப்பட்ட உரிமை, விருப்பம். அது குறித்து கருத்துச் சொல்ல எதுவும் இல்லை.

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்தால் ஜனநாயகம் மற்றும் நாட்டுக்குப் பாதுகாப்பு இல்லை. மத்தியில் 2024-ம் ஆண்டில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன் றிணைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்