மண் சரிவால் ஏற்காட்டுக்கு பயணிகள் வருகை குறைந்தது :

சேலம்: ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக பயணிகள் வருகை குறைந்தது.

ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், ஏற்காடு மலைப் பாதைகள், சேர்வராயன் மலைத் தொடர் ஆகியவற்றில் ஆங்காங்கே சிறு சிறு அருவிகளும், ஓடைகளும் நீரோட்டம் அதிகரித்து பயணிகளை ஈர்த்து வருகிறது. மேலும், வார விடுமுறை நாட்களில் பயணிகளின் வருகை அதிகரித்து இருந்தது.

மேலும், ஆயுத பூஜை தொடர் விடுமுறைக்கு பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் , கடந்த 11-ம் தேதி ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, மாற்றுப்பாதை வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டன. மேலும், சரிவு ஏற்பட்ட பகுதி சீரமைக்கப்பட்டு அச்சாலை வழியாக நேற்று முன் தினம் முதல் 30 கிமீ வேகத்தில் இலகுரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இருந்தபோது, ஆயுதபூஜை தொடர் விடுமுறை நாட்களில் பயணிகள் வருகை 30 சதவீதமாக குறைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்