இடைநிலை ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம் :

திருவண்ணாமலை: தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் நேற்று நடைபெற்றது.

மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் க.வெங்கட்ராமன், தலைமையிட செயலாளர் ச.வெங்கடேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஜி.சுரேஷ்குமார் வரவேற்றார். வேலை அறிக்கையை மாநில பொதுச் செயலாளர் ச.சங்கர், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் க.சு.பிரகாசம் வாசித்தனர். மாநில பொதுச் செயலாளர் அ.சங்கர் சிறப்புரையாற்றினார்.

பின்னர், சங்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அனைத்து அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும்” என்றார். இதில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், இடைநிலை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மாநில இணை செயலாளர் பெ.ஸ்டீபன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்