சேலத்தில் அழகு நிலைய பெண் கொலை :

By செய்திப்பிரிவு

சேலத்தில் அழகு நிலையம் நடத்தி வந்த பெண்ணை கொலை செய்தவர்கள் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் தேஜ்மண்டல் (26). இவர் சேலத்தில் பல இடங்களில் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்தார். மேலும், இவர் சேலம் வின்சென்ட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இரு வீடுகளை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். ஒரு வீட்டில் தேஜ்மண்டலும், இன்னொரு வீட்டில் அழகு நிலையத்தில் பணிபுரியும் இரு பெண், ஒரு ஆண் ஊழியர்கள் தங்கியிருந்தனர்.

ஆத்தூரைச் சேர்ந்த பிரதாப் என்பவர் தேஜ்மண்டல் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். மேலும், இருவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தேஜ்மண்டல் தங்கியிருந்த வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. தகவல் அறிந்து அங்கு சென்ற அஸ்தம்பட்டி போலீஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அங்கு தேஜ்மண்டல் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்டிருந்தார். உடலை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது கடந்த 5 நாட்களுக்கு முன்னர் தேஜ்மண்டல் வீட்டுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் வந்து சென்றது தெரிந்தது. மேலும், தேஜ்மண்டல் அழகு நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டை பூட்டி விட்டு சென்று இருப்பதும் தெரிந்தது.

மேலும், தேஜ்மண்டலுடன் பழகி வந்த பிரதாப் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவது தெரிந்து அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், அழகு நிலையத்தில் பணியுரிந்த ஊழியர்கள் மற்றும் கேமரா பதிவில் இருந்த இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்