சேலம் மாவட்ட கோ-ஆப்டெக்ஸில் - தீபாவளி பண்டிகைக்கு ரூ.7.10 கோடி விற்பனை இலக்கு :

சேலம் மாவட்ட கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரூ.7.10 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சேலம் கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகையில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை ஆட்சியர் கார்மேகம் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:

சேலம் தங்கம் பட்டு மாளிகையில் தீபாவளி பண்டிகைக்காக புதிய வடிவமைப்புகளில் ஜவுளி ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு ரூ.7.10 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி சிறப்பு தள்ளுபடியாக அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வசதியில் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் கோபால், நிர்வாக குழு இயக்குநர்கள் பாலசுப்ரமணியன், லலிதா, ராஜ ராஜேஸ்வரி வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்