நெல்லையில் கொலை வழக்குகளில் தொடர்புடைய - 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது :

திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் தொடர்புடைய 9 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னீர்பள்ளம் அருகே மாரியப்பன் என்பவர் கொலை வழக்கில் கைதாகியுள்ள சேரன்மகாதேவி வட்டம், கீழச்செவலைச் சேர்ந்த செல்லக்குட்டி மகன் அய்யப்பன் (20), அதே ஊரைச் சேர்ந்த சங்கர் மகன் பேச்சிமுத்து (20), பிராஞ்சேரியை சேர்ந்த பெரியதுரை மகன் வேல்முருகன் (28), மேலச்செவலைச் சேர்ந்த முருகன் மகன் சிவா என்ற மொட்டைசிவா(24), மேலச்செவல் ரஸ்தாவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சிவா (23) மற்றும் வடுவூர்பட்டியில் சங்கரசுப்பிரமணியன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கொத்தன்குளம், இந்திரா காலனி மந்திரமூர்த்தி மகன் மகாராஜன் என்ற ராஜா (20), சீயான் பாண்டியன் (31), கணபதி மகன் பிரபாகரன் (26), திருநெல்வேலி டவுன் பாறையடி தாசன் மகன் சீதா ராமகிருஷ்ணன் (24) ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். ஆட்சியர் உத்தரவின் பேரில் 9 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்