வீடு, கடைகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு :

பெரம்பலூர் மாவட்டம் இரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் மகன் சதீஸ் குமார்(37). இவர் நேற்று மாலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்றிருந்தார். இரவு வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, ரூ.3 லட்சம் ரொக்கம், 5 பவுன் நகைகள் ஆகியவை திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் மணிகண்டன்(26). நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இவரது கடையின் பூட்டை உடைத்து கல்லா பெட்டியிலிருந்த பணம் மற்றும் மளிகை பொருட்களை எடுத்துச் சென்றிருந்தனர்.

இதேபோல, துறைமங்கலம் 3 ரோடு பகுதியில் கிருஷ்ணன் மகன் வைத்தியலிங்கம்(40) என்பவரின் மளிகை கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கடையில் வைத்திருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்