உள்ளாட்சித் தேர்தல் : தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்க உத்தரவு :

By செய்திப்பிரிவு

திருப்பூர் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் எச்.ஏ.ரஹ்மான், வீ.புகழேந்திஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழக ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 9-ம்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும்அனைத்து வகையான தொழிலாளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு, தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994- பிரிவு 80 ஏ- ன் படிஅத்தொழிலாளர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் விடுப்பு வழங்கவேண்டும். அவ்வாறு ஊதியத்துடன் விடுப்பு வழங்க தவறும் தொழிற்சாலைகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE