காங்கிரஸ் கட்சி போராட்டம் :

By செய்திப்பிரிவு

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

வண்ணார்பேட்டை காங்கிரஸ் கமிட்டி அலுவலக வளாகத்தில் மாநகர் மாவட்ட தலைவர் கே. சங்கரபாண்டியன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. உத்தரபிரதேச முதல்வரின் உருவபொம்மையை எடுத்துவந்ததால், போலீஸார் அங்குவந்து உருவ பொம்மையை கைப்பற்றினர். கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் வதாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் சொக்கலிங்க குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்