வாக்குப்பதிவு மையங்களில் பார்வையாளர் ஆய்வு :

திருநெல்வேலி மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஜெ. ஜெயகாந்தன் தருவை, முன்னீர்பள்ளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு சென்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறும்போது, “மாவட்டத்தில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. வாக் காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு தொடங்கிய முதல் 2 மணி நேரத்திலேயே 15 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன” என்று தெரிவித்தார்.

பாளையங்கோட்டை கேடிசி நகரில் ஓயாசிஸ் மெட்ரிக் பள்ளியில் கீழநத்தம் ஊராட்சிக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவு மையத்தில் மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு ஆய்வு மேற்கொண்டார். தூத்துக் குடி உதவி ஆட்சியர் (பயிற்சி) மிருத்யஞ்ஜெய் நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப் பாளர் மணிவண்ணன் வாக்குப் பதிவு மையங்களை நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். முன்னீர்பள்ளம், சிவந்திப்பட்டி ,கே.டி.சி நகர், சீவலப்பேரி, மேலபுத்தனேரி உள்ளிட்ட பதற்றமான வாக்குச் சாவடிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்