நெல்லையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் :

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாநிலச் செயலாளர் குற்றால நாதன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் பிரம்மநாயகம், மாவட்டச் செயலா ளர் சுடலை, மாநகர் மாவட்டத் தலைவர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போராட்டம் குறித்து அவர்கள் கூறும்போது, ‘‘பழையபேட்டை கண்டியப்பேரியில் 800 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ளவர்கள் மாநகராட்சிக்கு முறையாக வரி செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தங்கள் நிலங்களை அவர்கள் விற்க செல்லும்போது பத்திரம் பதிவு செய்ய அதிகாரிகள் மறுக்கிறார்கள். இந்த இடம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பான ஆவணங்களை தருவதற்கு மறுக்கிறார்கள். இது குறித்து முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்