347 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை :

தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள நுண்பார்வையாளர்களுக்கு தேர்தல் பணி தொடர்பானஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் பார்வையாளர் பொ.சங்கர் தலைமை வகித்தார். ஆட்சியர் கோபால சுந்தரராஜ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் பேசும்போது, “தென்காசி மாவட்டத்தில்347 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானைவையாக கண்டறியப்பட்டுள்ளன. இதில் 122 வாக்குச்சாவடிகளில் நேரடியாக கண்காணிக்கும் பொருட்டு வெப் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. 109 நுண்பார்வையாளர்கள் இவற்றை கண்காணிப்பார்கள். மற்ற அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நாளன்று வாக்குச்சாவடியில் வாக்குபெட்டிகளை வாக்குப்பதிவுக்கு தயார் செய்வதுமுதல் வாக்கு பெட்டிகளை மண்டல அலுவலர்களுக்கு திருப்பி வழங்கும் வரை உள்ள அனைத்து நிகழ்வுகளையும் நுண்பார்வையாளர்கள் கண் காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE