வீராணம் ஏரியில் பச்சிளம் குழந்தை உடல் மீட்பு :

சோழதரம் அருகே வீராணம் ஏரியில் பச்சிளம் குழந்தையின் உடல் மிதந்தது.

சோழதரம் அருகே வானமா தேவி பகுதியில் வீராணம் ஏரியில் நேற்று முன்தினம் இரவுபிறந்து 4 நாள் ஆன பச்சிளம் குழந்தை உடல் ஏரி தண்ணீரில் மிதந்த நிலையில் இருந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சோழதரம் போலீஸாருக்கு தகவல் தந்தனர். முஷ்ணம் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, சோழதரம் சப்- இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீ ஸார் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீ ஸார் வழக்குப்பதிவு செய்தனர். குழந்தையை யார் ஏரியில் வீசியது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்