அதிமுக 100 சதவீதம் வெற்றிபெறும் : நெல்லையில் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி

100 சதவீதம் வெற்றிபெறும். மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் சூழ்நிலை இருந்தது.

சில கொள்கை முடிவுகள் எடுத்ததால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை பெற முடியவில்லை. திமுகவின் 505 பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்பி வாக்களித்தனர்.

அதிமுக ஆட்சியின் சாதனைகள், திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி பிரச்சாரம் செய்து, அதிமுக வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டி யன், மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா, முன்னாள் எம்எல்ஏ நாராயணன், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்