மின்வாரிய ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 6 பேருக்கு கருணை அடிப்படையில் பணி :

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் பணியின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் மற்றும் மேட்டூர் மின்பகிர்மான வட்டத்தில் பணிபுரிந்து பணிகாலத்தில் உயிரிழந்த வாரிசுதாரர்கள் 6 பேருக்கு அவர்களது கல்வித் தகுதியின் அடிப்படையில் பணிநியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வழங்கினார்.

மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் 5 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் தே.இளவரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE