நெல்லை ரயில் நிலையத்தில் - தெற்கு ரயில்வே தலைமை இயக்க மேலாளர் ஆய்வு :

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே தலைமை இயக்க மேலாளர் நீனு இட்டியெரா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு தனி ரயிலில் வந்த அவர் அங்கு நடைபெற்று வரும் இரட்டை ரயில் பாதை, நடை மேடை அமைப்பு பணிகள், உள் கட்டமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

சென்னையிலிருந்து மதுரை வரையில் இரட்டை ரயில் பாதை திட்டப்பணிகள் முடிவடைந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மதுரையிலிருந்து திருநெல்வேலி வரையில் இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. இப்பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் வரையில் இரட்டை ரயில் பாதை பணிகளை விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வுக்குப்பின் விருதுநகருக்கு அவர் புறப்பட்டு சென்றார். ஆய்வின்போது திருநெல்வேலி ரயில் நிலைய மேலாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்