சேலம் அருகே செங்கல் அணையில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் (31). இவர் லிஃப்ட் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். சேலம் பொன்னம்மாபேட்டையில் உள்ள உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு கேசவன் வந்திருந்தார். இவர் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் செங்கல் அணையில் குளிக்கச் சென்றார். அப்போது,
கேசவன் திடீரென மாயமானார். உறவினர்கள் அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தகவல் அறிந்து அங்கு சென்ற வீராணம் போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அணையில் தேடி கேசவனின் சடலத்தை மீட்டனர். இதில், அவரது தலையில் அடிபட்டிருந்தது. இதுதொடர்பாக வீராணம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago