போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது :

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகேயுள்ள இலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(19). விவசாயக் கூலித் தொழி லாளி. இவர், 13 வயது சிறுமியை திருமணம் செய்வ தற்காக கடத்திச் செல்ல திட்டமிட்டதாகவும், இதற்கு அவரது சகோதரி சித்ரா மற்றும் உறவினர்கள் பூவரசன், அன்பழகன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் கடந்த 24-ம் தேதி புகார் அளித்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், பின்னர் போக்ஸோ சட்டத்தின் கீழ் செந்தில்குமாரை நேற்று முன் தினம் கைது செய்தனர். மேலும், சித்ரா, பூவரசன், அன்பழகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE